நர்ஸ் அணியும் புளூ கலர் யூனிபார்மில் ஸ்வீடன் இளவரசி.. அரச பணிகளைத் துறந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை.!

By vinoth kumarFirst Published Apr 19, 2020, 12:21 PM IST
Highlights

இளவரசி சோபியா, தனது முதல் நாள் பணியின் புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். நீல நிற மருத்துவ உடையுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

ஸ்வீடன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி சோஃபியா, தன் அரச பணிகளைத் துறந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நர்ஸ் அணியும் புளூ கலர் யூனிபார்ம் அணிந்து சேவை செய்துவருகிறார்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 1,00,040 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15,00,070 மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரசால் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் நாட்டில் 12,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில், 35 வயதான ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இவர் ஆன்லைனில் இதற்காக 3 நாள் பயிற்சியினை முடித்தபின் அந்நாட்டுத் தலைநகரில் இருக்கும் சோபியாஹெமெட் மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்ய தொடங்கியுள்ளார். மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, மருத்துவர் அல்லது சுகாதார பணியாளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

இளவரசி சோபியா, தனது முதல் நாள் பணியின் புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். நீல நிற மருத்துவ உடையுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முன்னாள் மாடல் அழகியான சோபியா கடந்த 2015-ம் ஆண்டு சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்துகொண்டதன் மூலம் அவர் அரச குடும்பத்தின் அங்கமானார். இளவரசர் பிலிப்-சோபியா தம்பதிக்கு அலெக்சாண்டர் என்ற மகனும், கேப்ரியல் என்ற மகளும் உள்ளனர்.

click me!