அமெரிக்கா: சுதந்திர தினத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது

Published : Jul 05, 2022, 03:17 PM IST
அமெரிக்கா: சுதந்திர தினத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது

சுருக்கம்

அமெரிக்காவின் சிகாகோவின் புறநகரில் சுதந்திர தின பேரணி நடந்து கொண்டு இருக்கும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதியதாக சந்தேகப்படும் 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகி இருந்தனர். 36 பேர் காயம் அடைந்து இருந்தனர்.

அமெரிக்காவின் சிகாகோவின் புறநகரில் சுதந்திர தின பேரணி நடந்து கொண்டு இருக்கும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதியதாக சந்தேகப்படும் 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகி இருந்தனர். 36 பேர் காயம் அடைந்து இருந்தனர்.


போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராபர்ட் இ கிரிமோ III என்று தெரிய வந்துள்ளது. இவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

காருக்குள் இருந்தவரை போலீசார் கைது செய்ய சென்றபோது கிரிமோ காரில் இருந்து கைகளை தூக்கியவாறு இறங்கி தரையில் படுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த எட்டு மணி நேரத்தில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிகாகோ நகரின் புறநகரில் இருக்கும் ஹைலேண்ட் பார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிரிமோ. இவர் பெல்வேறு பெயர்களில் யூ டியூப் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோக்களில் சிலவற்றில் நண்பர்களுடன் சுற்றுவதைப் போலவும், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபடுவது போன்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

டொராண்டோ கண்காட்சியில் இருந்து காளி போஸ்டரை அகற்றுங்கள்… கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடி!!

ஹைலேண்ட் பார்க் பகுதியில் இந்தப் பேரணி நடந்தது. திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மக்கள் நிலைகுலைந்து தடுமாறி நான்கு திக்கும் ஓடினர். குழந்தைகள் அலறி அடித்து பெற்றோரை தேடிச் சென்றனர். கைகளில் கொண்டு வந்து இருந்த பொருட்களையும் ஆங்காங்கே வீசிச் சென்றனர். சுதந்திர தினத்தில் நடந்த இந்த சோக சம்பவம் அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு விசா... டார்கெட் இவங்க மட்டும் தான்.. இலங்கை அதிரடி..!

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  விடுத்திருந்த அறிக்கையில், ''இந்த சம்பத்தை பார்த்து நானும் எனது மனைவி ஜில்லும் அதிர்ச்சி அடைந்தோம். சுதந்திர நாளில் மீண்டும் ஒரு சோகத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்தியுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!