தெற்கு கார்டோமில் பயங்கர தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு; சூடானில் தொடரும் ராணுவ மோதல்!!

Published : Sep 11, 2023, 01:46 PM IST
தெற்கு கார்டோமில் பயங்கர தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு; சூடானில் தொடரும் ராணுவ மோதல்!!

சுருக்கம்

சூடான் நாட்டின் தெற்கு கார்டோம் பகுதியில் இருக்கும் சந்தையில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்து இருப்பதாக உள்ளூர் தன்னார்வக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சூடானில் ராணுவத்துக்கும், விரைவு துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பெரிய அளவில் போர் துவங்கி நடந்தது வருகிறது. தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தாக்குதலில் நேற்று நடந்த தாக்குதல் பெரிய வான்வழி தாக்குதலாக கருதப்படுகிறது. இரண்டு ராணுவப் படைகளுக்கும் இடையே பீரங்கித் தாக்குதல் நடந்து வருகிறது.

தெற்கு கார்டோம் பகுதியில் நேற்று ட்ரோன் தாக்குதல் பெரிய அளவில் நடந்துள்ளது. இந்த நகரின் பெரும்பாலான பகுதிகளை துணை ராணுவப் படை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்கள் காயம் அடைந்து சிகிச்சைக்கு வழி இல்லாமல் உள்ளனர். உள்ளூர் மக்கள் இந்தப் படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள். இவர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Explained:சூடான் நாட்டின் சர்வாதிகாரி ஒழிந்தார்; அதிகார போதை ஒழிந்ததா? சூறையாடப்படும் ஏழை நாடு; காரணம் என்ன?

காயம் அடைந்தவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்காக ரிக்ஷா மற்றும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சூடான் ராணுவத்தினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக விரைவு துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர். அனால், சூடான் ராணுவத்தினர் இதை மறுத்துள்ளனர்.

ஆபரேஷன் காவேரி ஆரம்பம்! சூடானில் இருந்து இந்தியா திரும்ப 500 இந்தியர்கள் ரெடி!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?