மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - 20 பேர் பலி, 100 பேர் படுகாயம்...

strangers gunshoot on public in america and 20 people death
strangers gunshoot on public in america and 20 people death


அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 100 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

அமெரிக்காவில் லாஸ்வெகாஸில் இசை கச்சேரி நடைபெற்றது. இதில் ஏராளமான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

Latest Videos

அப்போது, சாலையோரத்தில் கூடியவர்கள் மீது அருகில் இருந்த 32 வது மாடியில் இருந்து சில மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இதைப்பார்த்த போலீசார் மர்ம நபர்கள் மீது பதில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் துப்பாக்கி சூடு நடத்திய ஒரு மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர் அமெரிக்கர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

துப்பாக்கி சூடு நடத்திய மற்ற நபர்களை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image