இலங்கையில் இன்று இரவு ஓர் அதிரடி திருப்பம்….. என்ன நடக்கப்போகுது தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Nov 7, 2018, 10:17 PM IST
Highlights

இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று நள்ளிரவில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, ரணிலை ஒரே நாளில் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்ட சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக்கினார். ஆனால் இலங்கை பிரதமர் நானே என்று ரணில் அறிவித்துக் கொண்டார்

இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அதிபர் சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தார். இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

நாடாளுமன்றம் கூடஉள்ள நிலையில் ரணிலும், ராஜபக்சேவும் தங்கள் பெரும்பான்னைமயை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 225 எம்.பி.க்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் ராஜபக்சேவின் அணியில் 100 பேர் மட்டுமே இருக்கின்றனர்.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை 103 எம்.பி.க்கள் ஆதரிக்கின்றனர். இச்சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 16 பேர், இடதுசாரிகளின் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த (ஜேவிபி) 6 பேர் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க் களாக உள்ளனர். இவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிகிறது.

இதனால் ராஜபக்சே தோற்றுப் போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் எம்பி அஜித் பீ பெரேரா  , இன்றிரவு இலங்கை நாடாளுமன்றத்தை  கலைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறினார்.

நாடாளுமன்றம் சென்றபோது,  இந்த தகவல் தமக்கு கிடைத்தாக அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் அஜீத் பீ பெரேரா வெளியிட்ட இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்கிரசிங்கேவை மீண்டும் பிரதமர் ஆக விடாமல் தடுக்க சிறிசேனாவும், ராஜபக்சேவும் சதி செய்து வருவதாக தெரிகிறது.

click me!