சிங்கப்பூரில் கொரோனா.. ஒரே வாரத்தில் 965 பேர் மருத்துவமனையில் அனுமதி - புதிய தகவலை வெளியிட்ட சிங்கை MOH!

Ansgar R |  
Published : Dec 22, 2023, 01:06 PM IST
சிங்கப்பூரில் கொரோனா.. ஒரே வாரத்தில் 965 பேர் மருத்துவமனையில் அனுமதி - புதிய தகவலை வெளியிட்ட சிங்கை MOH!

சுருக்கம்

Singapore Covid 19 : சிங்கப்பூரில் கடந்த வாரத்தில் மொத்தம் 965 புதிய கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முந்தைய வாரத்தில் புதிதாக 763 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23 பேர் ICUவில் இருந்தனர். ஆனால் இப்பொது இந்த 2023ம் ஆண்டின் அதிகபட்ச அளவாக ஒரே வாரத்தில் இப்பொது 965 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று டிசம்பர் 21 வியாழன் அன்று சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் அந்த தரவு கூறுகின்றது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில், 460 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் மட்டுமே ஐசியூவில் அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் 10 முதல் சிங்கப்பூரில் பெருந்தொற்று வழக்கு அதிகரிக்க துவங்கி இப்பொது இவ்வாண்டின் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியுள்ளது. 

நியூ ஜெர்சியில் காணாமல் போன இந்திய மாணவி.. தகவல் தருபவர்களுக்கு 10,000 டாலர் பரிசு - FBI அறிவிப்பு! ஏன்?

MOH தரவுகளின்படி, சராசரியாக தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகபட்சமாக 560 வழக்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது. இது முந்தைய வாரத்தில் 350 வழக்குகளாகவும், அதற்கு முந்தைய வாரம் 225 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல சராசரியாக தினசரி ICU வழக்குகளின் எண்ணிக்கை இப்பொது 13 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் முந்தைய வாரம் 9 என்றும் மற்றும் இரண்டு வாரங்களுக்கு முன்பு 4 என்ற அளவிலும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஏழு நாள் சராசரி, தினசரி வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, டிசம்பர் 17 அன்று 7,730 ஆக இருந்து டிசம்பர் 18 அன்று 6,820 ஆகவும், பின்னர் டிசம்பர் 19 அன்று 6,530 ஆகவும் குறைந்துள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

"மருத்துவமனை மற்றும் ICU வழக்குகள் போன்ற சுகாதார பயன்பாட்டு குறிகாட்டிகள் பொதுவாக மதிப்பிடப்பட்ட வாராந்திர நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை விட பின்தங்கியுள்ளன" என்றும் MOH தனது இணையதளத்தில் கூறியது, இது "கோவிட்-19 நோயாளிகளில் அறிகுறிகள் உருவாக எடுக்கும் நேரம்" என்று குறிப்பிட்டது.

தாறுமாறாக வாகனத்தை ஓட்டிய இந்திய ஓட்டுநர்.. லாரி மோதி மூதாட்டி பலி - 2 தண்டனைகளை அறிவித்த சிங்கப்பூர் கோர்ட்!

இங்குள்ள பெரும்பாலான கோவிட்-19 நோயாளிகள் JN.1 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கொரோனா வைரஸின் Omicron துணை வகையான BA.2.86 ஆகும். BA.2.86 அல்லது JN.1 ஆகியவை பரவக்கூடியவை அல்லது பிற சுற்றோட்ட மாறுபாடுகளைக் காட்டிலும் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகின்றன என்பதற்கான தெளிவான அறிகுறி இப்போது இல்லை என்று ஒரு வாரத்திற்கு முன்பு MOH கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!