Latest Videos

4 மில்லியன் டாலர்களை வென்ற நபர்.. திடீரென உயிரிழப்பு.. மெரினா பே சிங்கப்பூர் கேசினோவில் நடந்த சம்பவம்!

By Raghupati RFirst Published Jun 24, 2024, 3:00 PM IST
Highlights

மெரினா பே சிங்கப்பூர் கேசினோவில் $4 மில்லியன் வெற்றி பெற்றவர், தனது வெற்றிக்குப் பிறகு திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஒரு நபர் 4 மில்லியன் டாலர்களை வென்ற சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். பெயரிடப்படாத நபர், கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டார் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

அந்த குறிப்பிட்ட அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் $4 மில்லியன் ஜாக்பாட் வென்றார். கொண்டாட்டங்களுக்கு நடுவே அந்த நபர் சரிந்து விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் உடனடியாக சூதாட்ட விடுதி ஊழியர்களால் தொடங்கப்பட்டன.

WINNER AT MARINA BAY SINGAPORE CASINO DIES AFTER $4 MILLION WIN

A man won $4 million at Marina Bay Singapore Casino but suffered a cardiac arrest from the excitement and died. pic.twitter.com/HMlZLPvadj

— Open Source Intel (@Osint613)

உடனே அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த காணொளி சமூக ஊடக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..

click me!