அச்சுறுத்தும் குரங்கு அம்மை… உள்ளூர் அவசரநிலையை அறிவித்தது சான் பிரான்சிஸ்கோ!!

Published : Jul 29, 2022, 11:49 PM ISTUpdated : Jul 29, 2022, 11:50 PM IST
அச்சுறுத்தும் குரங்கு அம்மை… உள்ளூர் அவசரநிலையை அறிவித்தது சான் பிரான்சிஸ்கோ!!

சுருக்கம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குரங்கு அம்மை நோயையொட்டி அங்கு உள்ளூர் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குரங்கு அம்மை நோயையொட்டி அங்கு உள்ளூர் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அவசர நிலை ஆகஸ்ட் 1  ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவின் பொது சுகாதாரத் துறை, இந்த நடவடிக்கையானது "குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளது. இதுக்குறித்து சான் பிரான்சிஸ்கோ மேயர் லண்டன் ப்ரீட் கூறுகையில், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு ஆரம்பகால நடவடிக்கை அவசியம் என்று கோவிட் சமயத்தில் சான் பிரான்சிஸ்கோ காட்டியது. இந்த வைரஸ் அனைவரையும் சமமாக பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்கள் LGBTQ சமூகத்தில் உள்ளவர்கள் இப்போதே அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதையும் நாங்கள் அறிவோம்.

இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறை... பாகிஸ்தான் டிஎஸ்பியாக ஒரு இந்து பெண் பதவியேற்பு!!

மேயர் அலுவலகத்தின்படி, நகரில் 261 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் 799 வழக்குகளும், அமெரிக்காவில் 4,600 க்கும் மேற்பட்ட வழக்குகளும், உலகளவில் 76 நாடுகளில் 19,000 க்கும் அதிகமான வழக்குகளும் உள்ளன என்று தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோ பொது சுகாதாரத் துறையானது, சான் பிரான்சிஸ்கன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்பத்தில் 35,000 டோஸ் குரங்கு அம்மை தடுப்பூசியைக் கோரியிருந்தாலும், இன்றுவரை நகரம் ஏறக்குறைய 12,000 டோஸ்களை மட்டுமே பெற்றுள்ளது என்று மேயர் அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது. நகரத்தில் உள்ள LGBTQ சமூகத்தின் உறுப்பினர்கள் கடந்த வாரம் ஒரு நகர விசாரணையில் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: விற்பனைக்கு வருகிறதா அலிபாபா தலைவர் ஜாக் மா நிறுவன பங்குகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

சான் பிரான்சிஸ்கோ பொது சுகாதாரத் துறை சோதனை அல்லது தடுப்பூசி கிடைப்பது குறித்த அடிப்படை தகவல்களை வழங்காததால் அவர்கள் சமூக ஊடகங்களை நம்பியிருப்பதாகக் கூறினார். குரங்கு அம்மை என்பது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் ஒரு வைரஸ் ஆகும். இது கடந்த காலத்தில் பெரியம்மை நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளைப் போன்றது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காயங்கள், உடல் திரவங்கள், சுவாசத் துளிகள் மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்களுடன் மிக நெருக்கமான தொடர்பு மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையத்தின்படி,  காய்ச்சல் தலைவலி, தசைவலி, முதுகுவலி, வீக்கம் நிணநீர் கணுக்கள், குளிர், சோர்வு மற்றும் முக்கியமாக, பருக்கள் அல்லது கொப்புளங்கள் போன்ற தோற்றமளிக்கும் ஒரு சொறி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விக்கிப்பீடியாவுக்கு 25வது பிறந்தநாள்.. அசத்தும் புதிய அப்டேட்ஸ்.. உலக அளவில் டாப் 5-ல் இந்தியா!
பாகிஸ்தான் ஊட்டி வளர்க்கப்படும் ***! முனீருக்கு நிரூபித்த டிரம்ப்.. மூக்குடைத்த அமெரிக்கா..!