லண்டன், பாரிஸ், பெர்லின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடுமா? ஐரோப்பாவில் பதற்றம்!

Published : Jun 02, 2025, 04:01 PM IST
Russia President Vladimir Putin (Photo: Reuters)

சுருக்கம்

ரஷ்யா ஐரோப்பிய தலைநகரங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளன. ஜெர்மனியின் பாதுகாப்புத் தலைவர் ரஷ்யா நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

ரஷ்யா லண்டன், பாரிஸ் அல்லது பெர்லின் போன்ற முக்கிய ஐரோப்பிய தலைநகரங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் தற்போது உலக அளவில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மிகப்பெரிய டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இதன் எதிரொலியாக உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யா குறிவைக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, மேற்கத்திய நாடுகளுடனான அதன் உறவுகளில் அதிகரித்துவரும் பதற்றம் ஆகியவை இந்த அச்சங்களுக்கு முக்கிய காரணமாகும். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இது எழுப்பியுள்ளது.

ஜெர்மனியின் எச்சரிக்கை

ஜெர்மனியின் பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், 2029-ம் ஆண்டுக்குள் அல்லது அதற்கும் முன்னதாக பால்டிக் நாடுகளைத் தாக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.

ரஷ்யா ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான டாங்கிகளை உற்பத்தி செய்து வருவதாகவும், அவை நேட்டோ தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், உக்ரைனுக்கு ஜெர்மனி டாரஸ் ஏவுகணைகளை வழங்குவது குறித்தும் ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் உள் பகுதிகளில் தாக்கக்கூடியவை என்பதால், ஜெர்மனியின் இந்த நடவடிக்கை நேரடி தலையீடாகக் கருதப்பட்டு, ரஷ்யாவின் பதிலடிக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

ரஷ்யாவின் நிழல் யுத்தம்

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு நிழல் யுத்தத்தை நடத்தி வருவதாகவும், ரஷ்ய ராணுவ புலனாய்வுப் பிரிவு (GRU) ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நாசவேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2023 மற்றும் 2024 க்கு இடையில் ரஷ்ய தாக்குதல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது ஐரோப்பாவின் பாதுகாப்பு திறனை ரஷ்யா சோதிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பா உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் குறித்த மறுபரிசீலனைக்கு இட்டுச் செல்லக்கூடும்.

ஐரோப்பாவின் பாதுகாப்பு

தற்போதைய நிலையில், ரஷ்யா இதுவரை எந்தவொரு ஐரோப்பிய தலைநகர் மீதும் நேரடி தாக்குதல் நடத்த அச்சுறுத்தல் விடுக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவுவதால், இந்த சாத்தியக்கூறுகள் பேசுபொருளாகியுள்ளன. இது ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால உறவுகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு