PM Modi Wishes Donald Trump: டிரம்ப் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

Published : Nov 06, 2024, 02:36 PM ISTUpdated : Nov 06, 2024, 02:37 PM IST
PM Modi Wishes Donald Trump: டிரம்ப் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸை தோற்கடித்த டிரம்ப் தன்னை அமெரிக்காவின் 47வது அதிபராக அறிவித்துக் கொண்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸை தோற்கடித்த டிரம்ப் தன்னை அமெரிக்காவின் 47வது அதிபராக அறிவித்துக் கொண்டார். பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், இந்தியா-அமெரிக்க கூட்டணியை வலுப்படுத்துவதற்கும், நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார். 

"எனது நண்பர் @realDonaldTrump அவர்களுக்கு உங்கள் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று மோடி சமூக ஊடக தளமான X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் தொடர்ந்து கட்டமைக்கும்போது, இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மற்றும் தந்திர கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பை புதுப்பிக்க நான் எதிர்பார்த்து இருக்கிறோம். நம் மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவுடனான நெருக்கமான ராஜதந்திர மற்றும் தந்திர உறவுகளைத் தொடரவும் விரிவுபடுத்தவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடியின் செய்தி பிரதிபலிக்கிறது. டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், இரு தலைவர்களும் குறிப்பாக இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தி, குறிப்பிடத்தக்க அளவில் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டனர். டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததால், உலகளாவிய பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார மீட்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இரு நாடுகளுக்கும் கிடைத்துள்ளது.

டொனால்ட் டிரம்பின் வெற்றிப் பேச்சு

டிரம்ப் புளோரிடாவில் இருந்து தனது வெற்றிப் பேச்சில், "வரலாறு காணாத மற்றும் சக்தி வாய்ந்த மக்களின் தீர்ப்பு" என்று அவர் விவரித்ததற்காக தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார், "உங்களின் 47வது அதிபராகவும், உங்களின் 45வது அதிபராகவும் தேர்வு செய்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

''அமெரிக்க அதிபர் தேர்தலில், அமெரிக்கா எங்களுக்கு வரலாறு காணாத மற்றும் சக்திவாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நாங்கள் செனட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளோம். அது நல்லது" என்று தெரிவித்தார். 

தனது உரையில், டிரம்ப் ஒற்றுமைக்காக பாடுபடுவதாகவும், வலுவான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான அமெரிக்காவை உறுதியளிப்பதாகவும் கூறினார். "ஒவ்வொரு நிமிடமும் நான் உங்களுக்காகப் போராடுவேன், வலுவான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான அமெரிக்காவை வழங்கும் வரை ஓய்வெடுக்க மாட்டேன்'' என்று நம்பிக்கை தெரிவித்தார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு பெரிய அதிர்ச்சி.. டிசம்பர் 15 முதல் புது ரூல்ஸ்.. H-1B விசா நேர்காணல்கள் ரத்து.!
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!