நாயைப் போல ஓடிப் போனது பாகிஸ்தான்: Ex Pentagon மைக்கேல் ரூபின்!!

Published : May 15, 2025, 03:14 PM ISTUpdated : May 15, 2025, 03:19 PM IST
Michael Rubin, a former Pentagon official (Photo/ANI)

சுருக்கம்

பயங்கரவாத இலக்குகளை இந்தியா துல்லியமாக குறிவைத்து தாக்கியதாகவும், சமீபத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பயந்து நாய் போல ஓடியதாகவும் பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார். 

பயங்கரவாத இலக்குகளை இந்தியா துல்லியமாக குறிவைத்ததாகவும், சமீபத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா நல்ல பதிலடி கொடுத்தது என்றும் பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார். "பாகிஸ்தானின் விமானநிலையங்களை இந்தியாவின் முப்படைகள் முடக்கிய பிறகு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பயந்துபோன நாயைப் போல அதன் வாலை கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு ஓடியது" என்று மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் மோசமாக தோற்றது

அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டில் தற்போது மூத்த உறுப்பினராக இருக்கும் ரூபின், ANI உடனான ஒரு நேர்காணலில், பாகிஸ்தான் ராணுவம் "மிகவும் மோசமாக தோற்றது" என்ற யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார். ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய அவர், இப்போது அனைத்து கவனமும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ராஜதந்திரம்

இந்தியா மே 7 அன்று நடத்திய தாக்குதல்கள் மற்றும் இந்தியா தான் செய்ய விரும்பியதை அடைய முடிந்ததா என்பது குறித்த தனது பார்வை குறித்து ரூபின் கூறுகையில், "இந்தியா ராஜதந்திர ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இதில் வெற்றி பெற்றது. இந்தியா ராஜதந்திர ரீதியாக வெற்றி பெற்றதற்கான காரணம், இப்போது அனைத்து கவனமும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு மீதுதான் உள்ளது" என்றார்.

பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாத அமைப்புகளும்

"பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் சீருடை அணிந்த பாகிஸ்தான் அதிகாரிகள் கலந்து கொண்டது, பயங்கரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ உறுப்பினருக்கும் அல்லது பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைக் காட்டுகிறது. அடிப்படையில், பாகிஸ்தானுக்கு உலகளவில் இருந்து நெருக்கடி முற்றப் போகிறது. எனவே, ராஜதந்திர ரீதியாக, இந்தியா உரையாடலை மாற்றியது. ராணுவ ரீதியாக, பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது. நான் ஒரு வரலாற்றாசிரியர், அதாவது கடந்த காலத்தை கணிப்பதற்கு எனக்கு பணம் கிடைக்கிறது. மேலும் நாம் உறுதியாக சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒவ்வொரு போரையும் தொடங்கி, எப்படியோ தான் வென்றதாக தன்னைத்தானே நம்பிக் கொண்டுள்ளது. இந்த 4 நாள் போரில் அவர்கள் வெற்றி பெற்றதாக தன்னைத்தானே நம்ப வைப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஒரு காரணம் இருக்கிறது. பயங்கரவாத தலைமையகங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை துல்லியமாக அழிக்க இந்தியாவால் முடிந்தது."

தப்பித்து நாய் போல ஓடிய பாகிஸ்தான்

"பாகிஸ்தான் பதிலளித்தபோது, ​​இந்தியா அவர்களின் பதிலடியை தகர்த்தது. பின்னர் பாகிஸ்தான் தொடர்ந்து பதிலடி கொடுக்க முயன்றபோது, ​​இந்தியா அவர்களின் விமானநிலையங்களை முடக்க முடிந்தது. போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் தனது கால்களுக்கு இடையில் வாலை வைத்துக்கொண்டு பயந்து ஓடிய நாயைப் போல ஓடியது. உண்மை என்னவென்றால், பாகிஸ்தான் தோற்றது மட்டுமல்லாமல், மிகவும் மோசமாக தோற்றனர் என்ற யதார்த்தத்தில் இருந்து அவர்களால் தப்ப முடியாது.

சிக்கலில் அசிம் முனீர்

இருப்பினும், இப்போது கேள்வி என்னவென்றால், பாகிஸ்தான் அடுத்து என்ன செய்யும் என்பதுதான். தெளிவாக, பாகிஸ்தான் ராணுவத்திற்குள் ஒரு பிரச்சினை உள்ளது. அது பாகிஸ்தான் சமூகத்திற்கு ஒரு புற்றுநோய் போன்றது. ஒரு ராணுவமாக, அது திறமையற்றது. எனவே அசிம் முனீர் தனது வேலையைத் தக்க வைத்துக்கொள்வாரா என்பது கேள்விக்குறி'' என்றார்.

இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் (HM) ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றன.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது. அதே போல் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்களையும் முயற்சித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களில் உள்ள ரேடார் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் விமானநிலையங்களை சேதப்படுத்தியது. மே 10 அன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டின.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்