பண நெருக்கடி.. சிக்கலில் சிக்கிய பாகிஸ்தான் - 1.5 லட்சம் அரசு பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

By Ansgar RFirst Published Sep 29, 2024, 9:48 PM IST
Highlights

Pakistan Cuts 1.5 Lakh Jobs : கடந்த சில ஆண்டுகளாக பண நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில், சுமார் 1.5 லட்சம் பேர் வேலையிழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் ஏற்படும் நிர்வாகச் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில், 7 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தின் கீழ் IMF உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சுமார் 1,50,000 அரசாங்கப் பதவிகளை அகற்றவும், ஆறு அமைச்சகங்களை மூடவும், மேலும் இரண்டு அமைச்சகங்களை ஒன்றாக இணைக்கவும் முடிவுகளை எடுத்து வருவதாக பாகிஸ்தான் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அறிவித்துள்ளது. 

செப்டம்பர் 26 அன்று சர்வதேச நாணய நிதியம், இறுதியாக உதவித் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது. மற்றும் செலவினங்களைக் குறைத்தல், வரி-ஜிடிபி விகிதத்தை அதிகரிப்பது, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பாரம்பரியமற்ற துறைகளுக்கு வரி விதிக்க பாகிஸ்தான் உறுதியளித்த பிறகு முதல் தவணையாக 1 பில்லியன் டாலர்களை அளித்துள்ளது. மானியங்களைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சில நிதிப் பொறுப்புகளை மாகாணங்களுக்கு மாற்றவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது பாகிஸ்தானுக்கான கடைசி திட்டமாகும் என்றும் கூறியுள்ளார். "இது கடைசி திட்டமாக இருக்கும் என்பதை நிரூபிக்க எங்கள் கொள்கைகளை நாங்கள் செயல்படுத்த வேண்டும்," என்றும் அவர் கூறினார், மேலும் G20ல் சேர, பொருளாதாரம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கமலா ஹாரிஸ் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு!!

அமைச்சுகளுக்குள் சரியான அளவீடுகள் நடந்து வருவதாகவும், ஆறு அமைச்சுக்களை மூடுவதற்கான தீர்மானம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அதேவேளை இரண்டு அமைச்சுக்கள் ஒன்றிணைக்கப்படும் எனவும் அவர் கூறினார். "கூடுதலாக, பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 1,50,000 பதவிகள் அகற்றப்படும்" என்று அவுரங்கசீப் கூறினார்.

கடந்த ஆண்டு சுமார் 3,00,000 புதிய வரி செலுத்துவோர் இருந்ததாகவும், இந்த ஆண்டு இதுவரை 7,32,000 புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளதாகவும், நாட்டின் மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கையை 1.6 மில்லியனில் இருந்து 3.2 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் வரி வருவாயை அதிகரிப்பது குறித்து விரிவாகப் பேசினார்.

ஔரங்கசீப் மேலும் கூறுகையில், தாக்கல் செய்யாதவர்கள் பிரிவு நீக்கப்படும் என்றும், வரி செலுத்தாதவர்கள் இனி சொத்து அல்லது வாகனங்களை வாங்க முடியாது என்றும் கூறினார். பொருளாதாரம் சரியான திசையில் நகர்ந்து வருவதாகவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்து, உச்ச நிலையை எட்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய ஏற்றுமதி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அவர் எடுத்துரைத்தார், மேலும் பொருளாதாரத்தின் வலிமை குறித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கொள்கை விகிதத்தை 4.5 சதவீதம் அரசு குறைத்துள்ளதாக தெரிவித்த ஔரங்கசீப், மாற்று விகிதம் மற்றும் கொள்கை விகிதம் எதிர்பார்த்தபடியே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். “அரசாங்கக் கொள்கைகளால் பணவீக்கம் குறைந்துள்ளதால் பொருளாதாரம் மேம்படுகிறது என்ற எங்கள் கூற்று வெற்றுக் கூற்று அல்ல. பணவீக்கம் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது,'' என்றார் அவர்.

பாக்கிஸ்தான் கடந்த பல ஆண்டுகளாக அதன் பொருளாதாரத்தை சரிசெய்ய போராடி வருகிறது, அது கடந்த 2023ல் இயல்பு நிலைக்கு திரும்பவிருந்தபோது தான், IMF மூலம் சரியான நேரத்தில் அந்நாட்டிற்கு கிடைத்த 3 பில்லியன் டாலர் பெரிய அளவில் கைகொடுத்தது. மேலும் பாகிஸ்தான் பெரும் கடைசி கடனாக இது இருக்கும் என்ற நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் உலகளாவிய கடன் வழங்குனருடன் பாகிஸ்தான் நீண்ட கால பேச்சுவார்த்தை நடத்தியது. எவ்வாறாயினும், நிதியத்திலிருந்து பாகிஸ்தான் ஏற்கனவே இரண்டு டஜன் அளவிலான கடன்களைப் பெற்றிருந்தாலும் நிரந்தரமாக பொருளாதாரத்தை வழிநடத்த அந்நாடு தவறியதாக சிலர் கூறுகின்றனர்.

1 ரூபாய் கூட இல்லாமல் இந்த நாட்டில் பயணம் செய்யலாம்.. எல்லாமே இலவசம்.. எந்த நாடு தெரியுமா?

click me!