குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்..! மீட்கும் பிரத்யேக காட்சி..!

Asianet News Tamil  
Published : Jul 09, 2018, 02:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்..! மீட்கும் பிரத்யேக காட்சி..!

சுருக்கம்

Operation resumes to bring out boys

தாய்லாந்து குகையில் இருந்து முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்பு..!

தாய்லாந்து குகையில் இருந்து முதற்கட்டமாக 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கால்பந்து அணியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் வெளியே அழைத்துவரப்பட்டுள்ளனர். 

தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்  பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் தெரிய வந்துள்ளது.

அந்த சிறுவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பிரார்தனை செய்து வருகின்றனர். மேலும் சிறுவர்களை மீட்கும் பணியில், தாய்லாந்து பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாடு மீட்புப்குழுவை சேர்ந்தவர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மற்றொரு பக்கம் மேலிருந்து துளையிட்டு அவ்வழியாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டும், குகையில் உள்ள தண்ணீரை வெளியேற்றப்பட்டும் வருகிறது...

மேலும்  குகையில் சிக்கியிருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு உள்ளே கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரு சிறுவர்களை குகையில் இருந்து மீட்டு உள்ளனர். 

இந்நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், மேலும் குகைக்குள் தண்ணீர் அதிகரிக்க கூடும் என்ற  நிலையும் உள்ளது.எனவே எப்போது மற்ற சிறுவர்களை மீட்கப்படும் என சரியாக கூற முடியாத நிலை உள்ளது என பிபிசி செய்தி நிறுவன செய்தியாளர் தெரிவித்து உள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!
ஆசைப்பட்ட நோபல் பதக்கம் கையில் வந்தாச்சு! ஆனா ஒரு கண்டிஷன்.. நோபல் கமிட்டி போட்ட குண்டு!