கொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுகொன்ற வட கொரிய அதிபர்...!! ரத்தவெறி முகம் காட்டும் அதிபர் கிம் ஜாங் உன்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 14, 2020, 4:35 PM IST
Highlights

இந்நிலையில் வடகொரியாவின் அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பினார் அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு  கொரோனா வைரஸ்  பாதிப்பு இருப்பது தெரியவந்தது . 

கொரோனா வைரஸ் பாதித்த நபரை வடகொரியா சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  அந்நாட்டு அதிபர் கிம் சுட்டுக்கொள்ள உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன . கடந்த டிசம்பர் மாதம்  சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா  வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியுள்ளது .  இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முடியாமல் சீனா பீதியில் உறைந்துள்ளது.  

 

சீனாவில் திரும்பிய  பக்கமெல்லாம் அழுகையும் மரண ஒலமுமாக   காட்சியளிக்கிறது .  சீனாவில் இருந்து சுமார் 23 க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்த வைரஸ்  பரவியுள்ளது .  சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் .  இது சர்வதேச அளவில் மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது .  இந்நிலையில் வடகொரியாவின் அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பினார் அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு  கொரோனா வைரஸ்  பாதிப்பு இருப்பது தெரியவந்தது . 

உடனே அவரை தனிமைப்படுத்திய அதிகாரிகள்  அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் , இந்நிலையில்  அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அவர் , அதிகாரிகளின்  கண்காணிப்பில் இருந்து  வெளியேற முயன்றதால் அவரை சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .  அந்நாட்டின் அதிபர் கிம் தான் அவரை சுட்டுக் கொள்ள உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன .  சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முதன்முதலில் சீனாவுக்கான எல்லையை மூடியது வட கொரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது . 

click me!