உளவு செயற்கைக்கோளை ஏவிய வடகொரியா.. புஷ்.!! கடுப்பான தென் கொரியா & ஜப்பான் - என்ன நடந்தது?

Published : May 31, 2023, 08:12 AM ISTUpdated : May 31, 2023, 08:19 AM IST
உளவு செயற்கைக்கோளை ஏவிய வடகொரியா.. புஷ்.!! கடுப்பான தென் கொரியா & ஜப்பான் - என்ன நடந்தது?

சுருக்கம்

வட கொரியா வானில் ஏவிய  உளவு செயற்கைக்கோள் கடலில் விழுந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வட கொரியா அரசு இன்று (மே 31) இராணுவ உளவு செயற்கைக்கோளை (ராக்கெட்) ஏவியது. ஆனால் அதில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்தது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்ரியில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிறகு பெரிய சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது.

இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும். வடகொரியா அரசு இதுகுறித்து, “ ராக்கெட் முதல் நிலை பிரிந்த பிறகு இரண்டாம் நிலை இயந்திரத்தின் அசாதாரண தொடக்கத்தால் உந்துதல் இழந்த பின்னர் கடலில் விழுந்தது" என்று கூறியது. செயற்கைக்கோள் ஏவப்பட்டதை தென் கொரியாவின் இராணுவம் கண்டறிந்துள்ளது. இது ரேடாரில் இருந்து மறைந்து, அசாதாரண விமானம் காரணமாக கடலில் விழுந்ததாகக் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

ஏவப்பட்ட உடனேயே, சியோல் நகர அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு அவசர குறுஞ்செய்தி எச்சரிக்கையை அனுப்பினர். "குடிமக்கள், தயவு செய்து வெளியேற்ற தயாராகுங்கள். குழந்தைகள் மற்றும் முதியவர்களை முதலில் வெளியேற்ற அனுமதிக்கவும்" என மத்திய சியோலில் விமானத் தாக்குதல் சைரன் ஒலித்தது. சியோலின் உள்துறை அமைச்சகம் சில நிமிடங்களுக்குப் பிறகு எச்சரிக்கை தவறாக வெளியிடப்பட்டது என்று கூறுவதற்கு முன்பு, இந்த எச்சரிக்கை ட்விட்டரில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் ஏவுகணைத் திட்டத்தைக் கண்டித்தது. 'செயற்கைக்கோள் ஏவுதல் என்று அழைக்கப்படுவது பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து ஏவுகணைகளையும் தடை செய்யும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை கடுமையாக மீறுவதாகும்" என்று வடகொரியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தென் கொரியா.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?