“எவன் என்ன சொன்னா எனக்கென்ன…?” – உலக நாடுகளை மீறி அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வடகொரியா

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 12:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
“எவன் என்ன சொன்னா எனக்கென்ன…?” – உலக நாடுகளை மீறி அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வடகொரியா

சுருக்கம்

உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி அடுத்த அணுகுண்டு சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

இதனையும்மீறி, வடகொரியா இதுவரை 5 அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதம் தேதி நடத்திய 4வது அணுகுண்டு, பல மடங்கு ஆற்றல் வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு. இந்த ஆண்டில் (2016) மட்டும் 3 அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செயற்கைகோள் படங்கள் மூலம் வடகொரியாவிலுள்ள புக்கி நகரில் அடுத்த அணுகுண்டு சோதனைக்கு அந்நாடு தயாராகி வருவது தெரியவருகிறது. இதனையடுத்து வடகொரியா எந்நேரத்திலும் அடுத்த அணுகுண்டை சோதித்துப்பார்க்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!