Solomon Islands earthquake: சாலமன் தீவுகளில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வாபஸ்!!

Published : Nov 22, 2022, 10:21 AM ISTUpdated : Nov 22, 2022, 10:34 AM IST
Solomon Islands earthquake: சாலமன் தீவுகளில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வாபஸ்!!

சுருக்கம்

சாலமன் தீவுகளில் இன்று இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இரண்டாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சாலமன் தீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதல் நிலநடுக்கம் மலாங்கோ பகுதியிலிருந்து தென்மேற்கே 16 கிமீ (10 மைல்) தொலைவில், 15 கிமீ (9 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக இருந்தது. 

இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து, 30 நிமிடங்களுக்குப் பின்னர், 6.0 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் சாலமன் நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்த தீவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் கடல் நீரோட்டங்களில் அசாதாரண சூழல் இருப்பதால் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

இரண்டு பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தீவு முழுவதும் பரவலாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. சாலமன் தீவுகள் முழுவதும் டிவி மற்றும் வானொலி சேவைகள் ஒளிபரப்பப்படவில்லை என்று பேஸ்புக்கில் சிலர் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாகவும், சேதம் குறித்த அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழப்பு 300 பேர் காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!!

"ஹோனியாரா பகுதி மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் கீழே வந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சாலமன் தீவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ளது பிஜி தீவு.  இங்கு உடனடியாக எந்த பாதிப்பும் உணரப்படவில்லை என்று அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Covid Cases in China:கலக்கத்தில் சீனா! அதிகரிக்கும் கொரோனா! 100 ஆண்டு பழமையான ஜிஜியாங் நாடக அரங்கு மூடல்

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!