லண்டன்.. மலை அருகே ஒரு அமானுஷ்யம்.. தீடீரென தோன்றிய "ஸ்டீல் மோனோலித்" - ஏலியன் வேலையா இருக்குமோ என சந்தேகம்?

Ansgar R |  
Published : Mar 12, 2024, 03:16 PM IST
லண்டன்.. மலை அருகே ஒரு அமானுஷ்யம்.. தீடீரென தோன்றிய "ஸ்டீல் மோனோலித்" - ஏலியன் வேலையா இருக்குமோ என சந்தேகம்?

சுருக்கம்

Mysterious Steel Monolith : இதெல்லாம் ஏன் நம்ம ஊரில் நடப்பதில்லை என்று இந்தியர்கள் கூறும் அளவிற்கு ஏதோ ஒரு அமானுஷ்யமான விஷயங்கள் உலக அளவில் ஏதோ ஒரு இடத்தில் நடக்கத்தான் செய்கின்றது.

சரி இப்பொது லண்டன் நகரில் நடந்துள்ள ஒரு அமானுஷ்யம் குறித்து பார்க்கலாம், லண்டனில் உள்ள வேல்ஸில் உள்ள ஒரு மலையில் சமீபத்தில் ஒரு பிரம்மாண்டமான எஃகு மோனோலித் கண்டுபிடிக்கப்பட்டது, இது உள்ளூர்வாசிகளையும், நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, 10-அடி உயரமுள்ள அந்த எஃகு, ஒரு மாபெரும் டோப்லெரோன் (ஒரு வகை சாக்லேட்) போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.

வார இறுதியில் போவிஸ் நகருக்கு அருகில் உள்ள ஹே பிளஃப் என்ற இடத்தில் உள்ளூர் மக்களால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "இது சற்று வினோதமானது என்றும் மற்றும் மழைநீரை சேகரிக்கும் அறிவியல் ஊடக ஆராய்ச்சி விஷயமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்" என்று ரிச்சர்ட் ஹெய்ன்ஸ் வேல்ஸ் ஆன்லைனில் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இந்திய பெண்.. மகனோடு தாயகம் தப்பி வந்த கணவர் - என்ன நடந்தது? போலீசார் விசாரணை!

"ஆனால் அது மிகவும் உயரமானது மற்றும் விசித்திரமானது என்பதை பின்னரே உணர்ந்தேன். அதன் அருகில் சென்றபோது, அது குறைந்தபட்சம் 10-அடி உயரமாகவும் முக்கோண வடிவில் இருப்பதையும் பார்த்தேன். கண்டிப்பாக துருப்பிடிக்காத எஃகு. அது என்று எனக்கு தெரியவந்தது. இரண்டு பேர் அதை எடுத்துச் சென்று தரையில் நடுவதற்கு போதுமான அளவில் அது எடையை கொண்டிருந்ததாக,” திரு ஹெய்ன்ஸ் மேலும் கூறினார்.

வைரலாகி வரும் அந்த மோனோலித்தின் படங்கள் ஆன்லைனில் பல கோட்பாடுகளை தூண்டிவிட்டன. இது வேற்றுகிரகவாசிகளின் வேலை என்று பலர் கூறினாலும், மற்றவர்கள் இது ஒரு விரிவான ரகசிய கலைப்படைப்பு என்று நம்பினர். ஆனால் இதுபோன்ற ஒரு பொருள் தோன்றுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கண்டத 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் உலகின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற உலோக பொருட்கள் காணப்பட்டுள்ளது. 

இந்த சூழலில் இந்த மர்ம பொருள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இது மனிதர்களின் வேலையா? அல்லது சிலர் நம்புவதை போல ஏலியன்களின் செயல் தானா என்பது புலப்படவில்லை. 

சீனா, பாகிஸ்தானை அலறவிடட்ட பிரதமர் மோடியின் அக்னி-5 அறிவிப்பு.. அமெரிக்காவுக்கு அடுத்த 6வது நாடு இந்தியா..

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு