அமெரிக்காவில் வால்மார்ட் மேலாளர் ஊழியர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு!!

Published : Nov 23, 2022, 11:42 AM ISTUpdated : Nov 23, 2022, 12:21 PM IST
அமெரிக்காவில் வால்மார்ட் மேலாளர் ஊழியர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு!!

சுருக்கம்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செவ்வாய்கிழமை பிற்பகலில் வால்மார்ட் மேலாளர் ஒருவர் ஊழியர்கள் நோக்கி காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் பலர் உயரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

"சாம்ஸ் சர்க்கிளில் உள்ள வால்மார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை செசபீக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இறந்துவிட்டார்" என்று செசபீக் நகரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. முதல் கட்ட தகவலின்படி வால்மார்ட்டில் பணியாற்றி வந்த மேலாளர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து செசபீக் காவல் துறை அதிகாரி லியோ கோசின்ஸ்கி முன்பு கூறுகையில், ''ஒருவர் மட்டுமே துப்பாக்கி சுடு நடத்தி இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம், அந்த ஒருவரும்  இறந்துவிட்டார்" என்று தெரிவித்து இருந்தார்.

துப்பாக்கிச் சூடு குறித்து கவலை தெரிவித்து இருக்கும் வெர்ஜீனியா செனட் உறுப்பினர் லூயிஸ் லூகஸ், ''எனது மாவட்டமான செசபீக்கில் உள்ள வால்மார்ட்டில் நடந்து இருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் நான் முற்றிலும் மனம் உடைந்துள்ளேன். பல உயிர்களைக் காவு வாங்கிய துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்தை நாட்டில் இருந்து ஒழிக்கும் வரை ஓயப் போவதில்லை'' என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!