குடிபோதையில் செக்ஸில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி ! 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2019, 10:14 AM IST
Highlights

மது விருந்தின்போது குடிபோதையில் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் உடலுறவு வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி அங்கிருந்து தவறி விழுந்து  பரிதாபமாக உயிரிழந்தனர்

ஈகுவேடர் நாட்டில் போர்டோவெய்ஜோ என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அவரது கணவர் ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில அந்தப் பெண்ணுக்கும் அந்த குடியிருப்பில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கும்  கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனிடையே அந்த இளம்பெண் தனது கள்ளக் காதலனுக்கு  தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  இரவு விருந்து முடிந்ததும் தனது கள்ளக் காதலருடன்  இளம்பெண் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

அவர்கள் குடிபோதையில் மூன்றாவது மாடியின் பால்கனியில்  செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் நிர்வாண நிலையில், அங்கிருந்து தவறி விழுந்தனர்.


இந்த சத்தத்தைக்  கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!