சீனாவின் கொடூர முகத்தை கிழித்த ஆராய்ச்சியாளர்..!! அய்யோக்கியத்தனத்தை போட்டு கொடுத்த நோபல் விஞ்ஞானி..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 25, 2020, 12:29 PM IST
Highlights

கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல அது சீன ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என ஜப்பான் உடலியல் மருத்துவ ஆராய்ச்சியாளரும் மற்றும் உடலியல் தொடர்பான ஆராய்ச்சிக்கா 2018 ஆம் ஆண்டு நோபல் பரிசு பொற்றவருமான  டாக்டர் தாசுகு ஹொன்ஜோ குற்றஞ்சாட்டுயுள்ளார்.

கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல அது சீன ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என ஜப்பான் உடலியல் மருத்துவ ஆராய்ச்சியாளரும் மற்றும் உடலியல் தொடர்பான ஆராய்ச்சிக்கா 2018 ஆம் ஆண்டு நோபல் பரிசு பொற்றவருமான  டாக்டர் தாசுகு ஹொன்ஜோ குற்றஞ்சாட்டுயுள்ளார். இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  அமெரிக்கா ஆப்பிரிக்கா ஐரோப்பா என அனைத்து கண்டங்களிலும் தனது கொடூர கரத்தை பரப்பியுள்ள இந்த வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளை பிடித்துள்ளது . இந்த உலகம் இதுவரை சந்தித்திராத அளவுக்கு மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த வைரஸ் .  உலக அளவில் 28 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை  2 லட்சத்தை நெருங்கியுள்ளது.  

அமெரிக்கா  இத்தாலி ஸ்பெயின்   பிரான்ஸ் பிரிட்டன் ஜெர்மனி   உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  கடந்த  ஆண்டு சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய இந்த கொடிய வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்து வருகிறது தற்போது ஒட்டு மொத்த நாடுகளின் கோபமும் சீனாவின் மீது திரும்பியுள்ளது,   இந்த வைரசுக்கு காரணம் சீனா தான் சீனாவின் வுஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர் .  ஆனால் சீனா இதை முற்றிலுமாக மறுத்துள்ளது .  ஆனாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகள் விடுவதாக இல்லை,   இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் ஜப்பான் நாட்டை சேர்ந்த உடலியல் மருத்துவ பேராசிரியரும் உடலியல் ஆராய்ச்சியில் நோபல் பரிசு பெற்றவருமான  டாக்டர் தாசுகு ஹொன்ஜோ கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல ,  இது முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட ஒன்று என கூறி அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளார்

இதுகுறித்து ஜப்பானில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  இந்த வைரஸ் இயற்கையானது என்றால் இது போன்று உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில்  இப்படி மோசமான தாக்காது ,  இயற்கையின் விதியின்படி வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வெப்பநிலை என வேறுபட்டுள்ளது ,  இது இயற்கையானது என்றால் அது சீனாவை போன்ற வெப்பநிலை கொண்ட நாடுகளில் மட்டுமே பரவியிருக் வேண்டும்.  ஆனால் இது சுவிட்சர்லாந்து போன்ற நாட்டிலும் பரவுகிறது.அதே நேரத்தில் இது பாலைவனப் பகுதிகளில் வேகமாக பரவுகிறது ,  இது இயற்கையானதாக இருந்தால் குளிர்ந்த இடங்களில் தான் வேகமாக பரவியிருக்க வேண்டும் ஆனால் வெப்பமான இடங்களில் அது உயிரிழந்திருக்க வேண்டும். ஆனால் இது எல்லா இடங்களில் பரவுவது இயற்கைக்கு முரணாக உள்ளது.   விலங்குகளில் உள்ள வைரஸ்கள் குறித்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆராய்ச்சி செய்துள்ளேன் ,  அதை வைத்து பார்க்கும்போது இது இயற்கையானது அல்ல இது மனிதனால் தயாரிக்கப்பட்ட வைரஸ் , முற்றிலும் செயற்கையானது...

 

நான் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன் ,  அந்த ஆய்வகத்தில் அனைத்து ஊழியர்களையும் நான் நன்கு அறிந்து அறிவேன், கொரோனா விபத்துக்குப் பின்பு அவர்கள் அனைவரையும் நான் தொடர்பு கொண்டேன் ,  ஆனால் அவர்களின் தொலைபேசிகள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக உபயோகத்தில் இல்லை...  ஒருவேளை இந்த ஆய்வுக்கூடதொழிலாளர்கள் வல்லுனர்கள் அனைவரும் இறந்திருக்கலாம்.  இன்று வரை எனது அனைத்து அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  கூறுகிறேன்,   கொரோனா இயற்கையானது அல்ல. இதை  என்னால் 100% அடித்துச் சொல்ல முடியும் .  இது நிச்சயம் வௌவால்களில் இருந்து வரவில்லை , சீனா தான் இதை தயாரித்துள்ளது என நான் சொல்வது பொய்யானது என நிரூபிக்கப்பட்டால் ,  அல்லது எனது மரணத்திற்குப் பிறகும் கூட அரசாங்கம் எனக்கு வழங்கிய நோபல் பரிசு திரும்ப பெற்றுக் கொள்ளலாம், இந்த விவகாரத்தில் சீனா பொய் சொல்கிறது .  இந்த உண்மை ஒருநாள்  வெளிச்சத்திற்கு வரும் என விஞ்ஞானி  தாசுகு ஹொன்ஜோ தெரிவித்துள்ளார் .

 

click me!