6000 பெண்களுடன் உறவுக்கொண்ட காதல் மன்னன் உறவின் போதே மாரடைப்பால் மரணம்..!

By manimegalai aFirst Published Sep 29, 2018, 1:03 PM IST
Highlights

இத்தாலியை சேர்ந்த காதல் மன்னன் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம்  அரங்கேறி உள்ளது.

இத்தாலியை சேர்ந்த காதல் மன்னன் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம்  அரங்கேறி உள்ளது.

இத்தாலியை சேர்ந்த ரிமினியின் ரோமியோ என அழைக்கப்படும் 63 வயதான மாவுரிஸியோ சான்பான்டி, இவர் இத்தாலியின் கடற்கரை நகரமான ரிமினியில் இரவு விடுதியில் தங்கி, பல பெண்களுடன் உறவு   கொண்டிருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் 1970- களில்  அதிக பெண்களுடன் உறவு கொண்டதாகவும் அதனால் இவரை காதல் மன்னனாக அறியப்பட்டார்
இதுவரை சுமார் 6,000 பெண்களுடன் உறவு கொண்டு இருந்ததாக  ஒரு புள்ளி விவரமே உள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று, 23 வயது இளம் பெண் ஒருவருடன் கார் ஒன்றில் உறவில் ஈடுபட்டிருக்கும்போது சான்பான்டிகு  மாரடைப்பு ஏற்பட்டு அப்போதே மரணம் அடைந்து உள்ளார். ஜான் பான்டின் கடைசி ஆசை கூட தான் ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் போதே உயிர் போக வேண்டும் என கூறி இருந்ததாக  ஏற்கனவே  பல  பத்திரிக்கையில் வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இரவுகளின் காதலனை இத்தாலி இழந்து விட்டதாக அந்நாட்டு மேயர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். 1980 ஆம் ஆண்டுகளில் இவருடன் உறவு கொண்ட ஸ்வீடன் பெண்கள் சிலர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவரை சந்தித்து பேசியது,  தலைப்பு செய்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!