
ஈரான் தலைநகா் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஐந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை இரவு போா் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்தப் பகுதியே தீப்பிழம்பாகவும், புகைமூட்டமாகவும் காட்சியளித்தது. கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை ராணுவத்துக்காக ஈரான் பயன்படுத்துவதால் அவற்றைக் குறிவைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது .