இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!

Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Iran rockets attacked Israel says Israel defense force civilians in bomb shelter ans

கடந்த வாரம் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஆதரவு போராளி ஹெஸ்பொல்லாவை குறிவைத்து, லெபனானில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் எரித்து, ஈரான் இப்பொது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக உடனடியாக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக சில மணிநேரங்களுக்கு முன்பு தகவல் கிடைத்த நிலையில், இஸ்ரேல் மீது ராக்கெட் நடத்தியுள்ளது ஈரான் என்று, இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை. 

அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளும், கடந்த ஏப்ரலில் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை பாதுகாக்க உதவ முன்வந்தன. இது குறித்து அமெரிக்க அதிகாரி மேலும் பேசியபோது. "இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் நேரடி இராணுவ தாக்குதல், ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தனர்.

Tap to resize

Latest Videos

உலக அழிவின் தொடக்கமா? 2025 குறித்து பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்!

நஸ்ரல்லாவின் கொலை இஸ்ரேலின் "அழிவை" கொண்டு வரும் என்று ஈரான் கூறியது, ஆனால் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் தெஹ்ரான், இஸ்ரேலை எதிர்கொள்ள ராணுவ வீரர்களை அனுப்பாது என்று கூறியது கூறியது. தெஹ்ரான் தான் ஈரான் நாட்டின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் இப்பொது ஈரான், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் பிற உலக வல்லரசுகள் தவிர்க்க விரும்புவதாக கூறியுள்ள பரந்த பிராந்திய மோதலின் அச்சத்தை கடுமையாக கூட்டும் என்றும் நம்பப்படுகிறது. ஜனாதிபதி ஜோ பிடன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலைத் தாக்கும் ஹெஸ்பொல்லாவின் திறனைத் தகர்க்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா எச்சரிக்கையுடன் ஆதரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

BREAKING - FOOTAGE OF MISSILES LAUNCHED FROM IRAN INTO ISRAEL pic.twitter.com/HKP56MN3P7

— Insider Paper (@TheInsiderPaper)

வாஷிங்டன் வெளியிட்ட செய்தியில் "மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். "இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் செவ்வாய்க் கிழமை காலை தனது மொராக்கோ பிரதிநிதி நாசர் பொரிட்டாவை வெளியுறவுத்துறையில் சந்தித்தபோது கூறினார். வாஷிங்டன் திங்களன்று மத்திய கிழக்கில் தனது படைகளை "சில ஆயிரம்" துருப்புக்களால் உயர்த்தி வருவதாகவும், புதிய பிரிவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்கனவே உள்ள மற்றவர்களை விரிவுபடுத்துவதாகவும் கூறியது.

பண நெருக்கடி.. சிக்கலில் சிக்கிய பாகிஸ்தான் - 1.5 லட்சம் அரசு பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image