இலங்கை தொடர்பான தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா... காரணம் இதுதான்!!

By Narendran SFirst Published Oct 7, 2022, 12:14 AM IST
Highlights

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. வாக்களிக்கவில்லை என்றாலும் இலங்கைத் தமிழர்களின் நியாயமான கொள்கைகள் தொடர்புடைய நோக்கங்களை அடைவதற்கு இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. முன்னதாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' என்ற வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் 20 நாடுகள் ஆதரவாகவும், சீனா மற்றும் பாகிஸ்தான் உட்பட ஏழு நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், நேபாளம் மற்றும் கத்தார் உட்பட 20 பேர் வாக்களிக்கவில்லை.

இதையும் படிங்க: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு… விண்ணப்பிப்பது எப்படி? யார் விண்ணப்பிக்கலாம்?

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 20 நாடுகளில், இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, கொரியா குடியரசு மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும். தீர்மானத்தை நிறைவேற்றும் போது, ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் இந்திரா மணி பாண்டே விடுத்த அறிக்கையில், உறுதிமொழிகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் உணர்வு, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துதல், அதை நோக்கிய முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்... அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி உத்தரவு!!

இந்த உறுதிமொழிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள வகையில் செயல்படுமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்தியது. உடனடி அண்டை நாடாக, 2009க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கு இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. அண்மைக்காலமாக இலங்கை மக்களுக்கு பொருளாதார நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்ள இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையின் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதி மற்றும் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றிற்கான தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளால் இந்தியா எப்போதும் வழிநடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!