Israel airstrikes Iran : ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - இந்தியர்களுக்கு எச்சரிக்கை

Published : Jun 13, 2025, 10:16 AM IST
Israel attacks Iran

சுருக்கம்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் முன்னெச்சரிக்கை வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. டெஹ்ரான், நதான்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன, 

Israel airstrikes Iran : ஈரானுக்கு எதிராக அதன் அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் முன்னெச்சரிக்கை வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் ஜெட் விமானங்கள் "ஈரானின் பல்வேறு பகுதிகளில் அணு இலக்குகள் உட்பட இராணுவ இலக்குகள்" மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. டெஹ்ரானில் பலத்த சப்தத்தோடு வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன, 

நகரின் கிழக்கில் ஈரானிய புரட்சிகர காவலர்களின் முக்கிய தளத்தில் தீ மற்றும் புகை காணப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரானின் மத்திய இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள முக்கிய அணுசக்தி தளம் அமைந்துள்ள நதான்ஸிலும் "பெரிய வெடிப்புகள்" பதிவாகியுள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரான் அணு இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

"நதான்ஸ் செறிவூட்டல் வசதி பலமுறை தாக்கப்பட்டுள்ளது," என்று அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது, மேலும் அந்த இடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதை காட்டும் காட்சிகளையும் ஒளிபரப்பியுள்ளது. டெஹ்ரானில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி முகமது பாகேரி மற்றும் மூத்த அணு விஞ்ஞானிகளை இந்தத் தாக்குதல்கள் "இறந்திருக்கலாம்" என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில், புரட்சிகர காவலர்களின் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இப்போது?

டெஹ்ரானில் உள்ள மதகுருக்கள் நடத்தும் அரசை அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்க்கிறது, மேலும் கடந்த ஆண்டு ஈரானிய வான் பாதுகாப்பைத் தாக்கியது. இந்த நடவடிக்கையை "முன்னெச்சரிக்கைத் தாக்குதல்" என்று அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்திருந்தார். ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் புதன்கிழமை ஈரான் அதன் கடமைகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, உலகளாவிய நடவடிக்கைக்கு இஸ்ரேல் மீண்டும் அழைப்பு விடுத்தது.

திருப்பி அடிக்க தயாராகும் ஈரான்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் அண்டை நாடான ஈராக் அதன் வான்வெளியை முழுவதுமாக மூடியுள்ளது. ஈரான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது, அவசர நிலையை அறிவித்துள்ளது, மேலும் அதன் வான்வெளியையும் மூடியுள்ளது.

இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள்

இதனிடையே இஸ்ரேல் மற்றும் ஈரானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்குமாறும், இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட்அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எச்சரிக்கையுடன் இருங்கள், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்கு அருகில் இருங்கள்" என்று கூறியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் ஈரான் மீது முன்னெச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்த அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?