Elon Musk: அடடே.. என்ன மனுஷன்யா.. இந்திய வம்சாவளி மருத்துவருக்கு நிதி உதவி அளித்த எலான் மஸ்க்.. ஏன் தெரியுமா?

By Raghupati RFirst Published Mar 29, 2024, 2:34 PM IST
Highlights

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவருக்கு நிதி உதவி அளித்துள்ளார்.

கொரோனா தொற்று 2020 ஆண்டை தலைகீழாக மாற்றியது. உலகமே உறைந்தது. இதனால், பொதுமக்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.  கனடாவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் குல்விந்தர் கவுர் கில்லின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார். அரசாங்கம் விதித்துள்ள லாக்டவுன் மற்றும் தடுப்பூசி உத்தரவுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மருத்துவ சமூகமும் அவளைக் குற்றம் சாட்டியது.

நீதிமன்றத்தில் அவள் மீது வழக்கு தொடரப்பட்டது. அப்போதிருந்து, நீதிமன்றத்தால் செலவுகளை ஏற்க முடியவில்லை மற்றும் அந்த கட்டணத்திற்கான நிதி திரட்ட வேண்டியிருந்தது. உண்மையில், டாக்டர். குல்விந்தர் கவுர் கில் கனடாவில் நோய் எதிர்ப்பு மற்றும் குழந்தை மருத்துவத்தில் பணிபுரிகிறார். கோர்ட் வழக்கில் சிக்கியுள்ள அவர், நீதிமன்றச் செலவாக 300,000 (ரூ. 1,83,75,078) கனடிய டாலர்களை செலுத்த வேண்டும். சமூக ஊடக தளம் மூலம் நிதி திரட்ட முடிவு செய்தார்.

2020 ஆம் ஆண்டில், கனேடிய மற்றும் ஒன்டாரியோ அரசாங்கங்களின் லாக்டவுன் மற்றும் தடுப்பூசி உத்தரவுகளுக்கு எதிராக ட்விட்டரில் பகிரங்கமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக மருத்துவ சமூகம் மற்றும் ஊடகங்கள் உட்பட மொத்தம் 23 பேர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து, குல்விந்தர், தன் மீது வழக்குகள் போடப்பட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

In support of your right to speak https://t.co/qWCOYYALPf

— Elon Musk (@elonmusk)

விசாரணை நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மனுதாரர்கள் சார்பில் மூன்று லட்சம் கனேடிய டாலர்களை (சுமார் ரூ. 2 கோடி) மார்ச் 31ஆம் தேதிக்குள் சட்டச் செலவுகளாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் போராடி சம்பாதித்ததை எல்லாம் செலவழிக்க வேண்டும் என்று குல்விந்தர் புலம்பினார்.

அந்தத் தொகையைச் செலுத்த ஆன்லைன் க்ரூட்ஃபண்டிங் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 2 லட்சம் கனேடிய டாலர்கள் வசூலானது. இதை அறிந்த எலான் மஸ்க், சட்டப்பூர்வ கட்டணத்தைச் செலுத்த முன்வந்தார். மீதமுள்ள தொகையை தருவதாக உறுதியளித்தார். இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

click me!