இந்தவகை ரத்தம் இருந்தால் கொரோனா வைரஸ் பரவாது..!! சீனா சொன்ன சுவாரஸ்ய தகவல்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2020, 2:13 PM IST
Highlights

இதற்காக ஏ வகை இரத்தம் கொண்டவர்கள் பீதியடைய தேவையில்லை எனவும் . ஓ ரத்தம் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாகவும்  அர்த்தமில்லை எனவும் தியான்ஜின் ஆராய்ச்சியாளர்  காவ் இங்டாய் கூறியுள்ளார்

உலகையே நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் ஏ ரத்தவகை கொண்டவர்களே அதிகமாகத் தாக்குவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.    சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை .  ஆகவே இந்த வைரஸ் உலக அளவில் மிக வேகமாக பரவி வருகிறது .  உலக அளவில் இந்த வைரசுக்கு  7 ஆயிரத்து 987 பேர் பலியாகி உள்ளனர் .  சுமார் 145 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம்  அதிகமாக உள்ளது இந்த வைரஸ் இதுவரையிலும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது .  இந்த வைரஸ் எப்படி தோன்றியது ,  இது எதிலிருந்து உருவானது என்ற பின்னணி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை .

 

இந்நிலையில் உலக சுகாதார ஆராய்ச்சி மையம் தொடங்கி உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பான ஆராய்ச்சியில்  ஈடுபட்டு வருகின்றனர் உலகம் முழுக்க ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 556 பேர் இந்த வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் சீன ஆய்வாளர்கள் வுகானில்  உள்ள  இரண்டு மருத்துவமனைகளிலும் முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர் .   அதாவது  ரத்த வகைகளை வைத்து   SARC-CoV-2 பரிசோதனையை பயன்படுத்தி 2173 நோயாளிகள் ரத்த வகைகளை வைத்து கரோனா வைரஸ் நேர்மறை ஆய்வு செய்யப்பட்டது  அதில் 1778 நோயாளிகளில் 37.75% பேர் ஏ  இரத்த வகைகளையும் ,  9.10 சதவீதம்பேர் ஓ  ரத்த வகைகளையும் கொண்டுள்ளனர்.  அதாவது கொரோனா வைரசால் ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பி வகை ரத்தம் கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது . 

அந்த மருத்துவமனையில் வைரஸால் இறந்த 206 பேரில் 41. 26% பேர் ஏ இரத்தவகை கொண்டுள்ளதாகவும் ,  25 சதவீதம் பேர் ஓ இரத்த வகை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது ஆனால் இதற்காக ஏ வகை இரத்தம் கொண்டவர்கள் பீதியடைய தேவையில்லை எனவும் . ஓ ரத்தம் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாகவும்  அர்த்தமில்லை எனவும் தியான்ஜின் ஆராய்ச்சியாளர்  காவ் இங்டாய் கூறியுள்ளார் அனைவரும் அரசு அதிகாரிகள் கூறும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .  இதற்கு முன்னதாக சார்ஸ் நோய் வந்தபோது நடத்தப்பட்ட ரத்தப்பரிசோதனை ஆய்விலும் ஏ வகை ரத்தம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.   இதுவும் சார்ஸ் குழுவின் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ஆகும் என அவர் கூறியுள்ளார். 
 

click me!