பாகிஸ்தானின் விமானப்படை தளத்தில் மிகப்பெரிய பயங்கவாத தாக்குதல்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..

Published : Nov 04, 2023, 09:57 AM IST
பாகிஸ்தானின் விமானப்படை தளத்தில் மிகப்பெரிய பயங்கவாத தாக்குதல்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..

சுருக்கம்

பாகிஸ்தானின் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி பாகிஸ்தான் விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் இந்த தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன, இருப்பினும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு தலிபான்களுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதுடன், மீட்பு பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் தற்கொலை படை வீரர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஏணியைப் பயன்படுத்தி விமான தளத்தின் வேலியிடப்பட்ட சுவர்களுக்குள் நுழைந்ததாக மேலும் அவர்களிடம் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த தாக்குதலில், விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாகிஸ்தான் ராணுவம் சார்பில் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!