பாகிஸ்தான், லாகூரில் பயங்கர வெடிகுண்டு சத்தம்: ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

Published : May 08, 2025, 11:03 AM ISTUpdated : May 08, 2025, 11:14 AM IST
பாகிஸ்தான், லாகூரில் பயங்கர வெடிகுண்டு சத்தம்: ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

சுருக்கம்

பாகிஸ்தானின் லாகூரில் வியாழக்கிழமை காலை ஒரு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Lahore explosion: பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் வியாழக்கிழமை காலை ஒரு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக ஜியோ டிவி மற்றும் ராய்ட்டர்ஸ்  ஒளிபரப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஒன்பது இடங்களில் இந்தியா நேற்று அதிகாலை  பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருந்தது. இதையடுத்து, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரி எல்லையில் இரண்டு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது.

தாக்கத்தை ஏற்படுத்திய பயங்கரவாதியின் பேச்சு 
பஹல்காமில் 26 இந்திய சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆண்கள். இந்த சம்பவம் நடந்த அன்று கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம் பயங்கரவாதி, மோடியிடம் போய் கூறு என்று கூறிக்கொண்டே அவரது கணவரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் பெரிய அளவில் இந்தியர்களின் மனதில் மட்டுமின்றி உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தான் என்பது தெரிய வந்தது.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு முழு அதிகாரம் 
இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய  பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தி இருந்தது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் ராணுவத்துக்கு அனைத்து அதிகாரங்களையும் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் வழங்கியுள்ளார்.

பஹல்காம் குற்றச்சாட்டை இஸ்லாமாபாத் மறுத்து, ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதாக சபதம் செய்தது. ஐந்து இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் பொய்  செய்தியை பரப்பியது. எல்லை தாண்டிய பீரங்கி தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. 

எல்லை தாண்டிய துப்பாக்கிச் சண்டை இரவு முழுவதும் சற்றுக் குறைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா தனது தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் சீக்கியர்களின் பொற்கோயில் இருக்கும் அமிர்தசரஸ் உட்பட, பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் மின்சார துண்டிப்பு செய்து போர் ஒத்திகைகளை நேற்று மேற்கொண்டு இருந்தது. 

லாகூரில் பயங்கர வெடி சத்தம்; மக்கள் அலறல்:


இந்த நிலையில்தான் லாகூரில் வெடிகுண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாகூரில் உள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடுவதையும், புகை மேகங்களைக் கண்டதாகத் தெரிவிப்பதையும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

இந்தப் பகுதி லாகூரின் ஆடம்பரமான மத்திய வணிக மாவட்டம் மற்றும் லாகூர் ராணுவப் பாசறையை ஒட்டியுள்ளது. சியால்கோட், கராச்சி மற்றும் லாகூர் விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5-6 அடி உயரமுள்ள ட்ரோன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் சமா டிவியிடம் தெரிவித்துள்ளன. ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதா சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!
இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!