
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஆயிஷா மாலிக் என்ற பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 55 வயதான ஆயிஷா மாலிக், ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, முன்னணி கார்ப்பரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகள் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்கிறார். பாகிஸ்தானின் நீதித் துறை வரலாற்றில் உச்சநீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆயிஷா மாலிக், சொத்துக் குவிப்பு மற்றும் விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177 ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்றக் குழு இரு தினங்களுக்கு முன் இதை பரிசீலித்தது. லாகூா் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் ஆயிஷா மாலிக் நான்காவது இடத்தில் இருந்தார்.
ஆனாலும், பணி மூப்பைக் கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. அதைத் தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்துள்ளாா். லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார். பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்கிறார். நீதிபதி ஆயிஷா நியமனம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.