அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள இந்தியர்..!! அதிபர் ட்ரம்ப் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2020, 2:51 PM IST
Highlights

வாஷிங்டனில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய அமெரிக்கரான விஜய் சங்கரை நியமிக்க விரும்புவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பல உயர் பதவிகளை வகித்து வரும் நிலையில், அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும்  இடையேயான உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கியதையடுத்து, இந்தியா மீதான நம்பிக்கை அமெரிக்காவிடம் அதிகரித்துள்ளது.  அதுமட்டுமின்றி மோடி- டிரம்ப் பரஸ்பர நட்பால்  இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான அரசியல் உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு  வலுப்பெற்றுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் பட்டியலில் இந்தியா முக்கிய இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்துள்ளது. 

பல்வேறு வகைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு வலுவடைந்து வரும் நிலையில், இந்திய அமெரிக்கரான விஜய் சங்கர் என்பவரை கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். விரைவில் ஒரு இந்திய-அமெரிக்கரை நாட்டின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக மாற்றலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாஷிங்டனில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய அமெரிக்கரான விஜய் சங்கரை நியமிக்க விரும்புவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.  இதற்கு செனட் ஒப்புதல் அளித்த பின் விஜய் சங்கர் கொலம்பியா மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவார்.  அவர் தற்போது நீதித்துறையின் குற்றவியல் பிரிவில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேநேரத்தில் மேல்முறையீட்டு துறையின் துணைத் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். அவர் கடந்த 2012ம் ஆண்டு நீதித்துறையில் இணைந்தார். 

 

இதற்கு முன்பு, அவர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேயர் பிரவுனின் அலுவலகத்திலும், எல்.எல்.சி மற்றும் கோவிங்டன் & பர்லிங், எல்.எல்.பி. சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, இரண்டாவது சுற்றுக்கான அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி செஸ்டர் ஜே. ஸ்ட்ராபினின் சட்ட எழுத்தராக பணியாற்றினார். அவர் டியூக் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ பட்டம் பெற்றார், பின்னர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் தனது ஜூரிஸ் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் வர்ஜீனியா லா ரிவியூவின் குறிப்புகள் தணிக்கையாளராகவும் அங்கு பணியாற்றினார். இங்கே அவர் அமெரிக்காவின் சட்ட பட்டதாரிகளின் ஹானர் சொசைட்டியான ஆர்டர் ஆஃப் தி கோயிஃப் உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!