ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு.. 46 சிறுமிகள் உட்பட 53 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati RFirst Published Oct 3, 2022, 7:27 PM IST
Highlights

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கில் ஷாஹித் மசாரி சாலையில் உள்ள புல்-இ-சுக்தா பகுதிக்கு அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

காபூல் வகுப்பறை தற்கொலை குண்டுவெடிப்பில் 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் காமா பிரஸ், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கில் ஷாஹித் மசாரி சாலையில் உள்ள புல்-இ-சுக்தா பகுதிக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

கடந்த வெள்ளிக்கிழமை, ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 100 குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆப்கானிஸ்தான் தலைநகரின் ஷியைட் பகுதியில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலை படை  தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !

click me!