18 லட்சத்தை நெருங்கியது கொடிய கொரோனா பாதிப்பு..! உலக நாடுகள் பரிதவிப்பு..!

By Manikandan S R SFirst Published Apr 12, 2020, 7:35 AM IST
Highlights

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளை கொரோனா வைரஸ் தனது கோர பிடியில் தற்போது வைத்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது.

ஒட்டுமொத்த உலகத்தையும் நிலைகுலையச் செய்திருக்கும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480 மக்கள் உயிரழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 17 லட்சத்து 74 ஆயிரத்து 63  பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 4 லட்சத்து ஆயிரத்து 500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முதன்முதலாக கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் நோய் 4 மாதங்களாக அந்நாட்டை ஆட்டிப் படைத்தது. அங்கு 3,300 மக்கள் பலியாகி 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளை கொரோனா வைரஸ் தனது கோர பிடியில் தற்போது வைத்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

மேலை நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோர் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா விளங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்து 591 பேர் பலியாகி இருக்கின்றனர். பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா தற்போது முதலிடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!