மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவால் 16 வயது மாணவி மரணம்.. மாதவிடாய் வலியை குறைக்க மாத்திரை எடுத்த பிறகு விபரீதம்..

Published : Dec 19, 2023, 12:15 PM IST
மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவால் 16 வயது மாணவி மரணம்.. மாதவிடாய் வலியை குறைக்க மாத்திரை எடுத்த பிறகு விபரீதம்..

சுருக்கம்

இங்கிலாந்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் லைலா கான், மாதவிடாய் வலியைக் குறைக்க மாத்திரை சாப்பிட்டதால் மூளையில் ரத்தம் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் லைலா கான், மாதவிடாய் வலியைக் குறைக்க மாத்திரை சாப்பிட்டதால் மூளையில் ரத்தம் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லைலா மாதவிடாய் சுழற்சியின் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரின் நண்பர்களால் கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாதவிடாய் வலியைக் குறைக்க எந்த மருத்துவர்களும் மாதவிடாய் மாத்திரை அல்லது கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கவில்லை. நண்பர்களின் பரிந்துரைகளின் பேரில் சில மருந்துகளை சுயமாக எடுத்துக்கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து மாதவிடாய் வலி வலுவிழக்கத் தொடங்கியபோது, அறிகுறிகளின் விவரங்களைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர்களின் ஆலோசனையின் பேரில், நவம்பர் 25 முதல், மாதவிடாய் வயிற்று பிடிப்புகள் குறையும் என்று கூறப்பட்ட கருத்தடை மாத்திரைகளை அவர் உட்கொள்ளத் தொடங்கினார். டிசம்பர் 5 வாக்கில் அவளுக்கு தலைவலி தொடங்கியது  பின்னர் வார இறுதியில், அவள் வாந்தி எடுக்க தொடங்கி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதை அடுத்து இங்கிலாந்தின் சுகாதாத்துறை ஹெல்ப்லைனில் ஆன்லைனில் மருத்துவர்களை அணுக லைலாவின் தாய் உதவி செய்துள்ளார். அப்போது பேசிய மருத்துவர்கள், 'சிவப்புக் கொடிகள் இல்லை' என்றும் மறுநாள் காலையில் அவர் கிளினிக்கிற்குச் செல்லலாம் என்றும் கூறினார். மேலும் சோதனைகள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

எனினும் திங்கள்கிழமை மாலை அவர் வலியால் துடித்த லைலா கான், வீட்டின் குளியலறையில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மேற்கொள்ளப்பட்ட CT ஸ்கேன் சோதனையில் மூளையில் இரத்த உறைவு கண்டறியப்பட்டது. பின்னர் ஒரு பெரிய மற்றும் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவளுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் டிசம்பர் 13 புதன்கிழமை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுயமாக மருந்து எடுத்துக்கொண்டதால் ஏற்பட விபரீதம்

லைலாவின் குடும்பம் இப்போது கருத்தடை மாத்திரையை உட்கொள்வதால் ஏற்படும் இந்த அரிய சிக்கலைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. லைலாவின் உறவினர் அலிசியா பின்ஸ் பேசிய போது “ லைலா வலிமிகுந்த மாதவிடாய் சுழற்சியால் அவதிப்பட்டதாகவும், நண்பர்கள் சொன்னதைத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட முடிவு செய்ததாகவும் கூறினார். ஆரம்பத்தில் இந்த மாத்திரையால் 10 நாட்களில் அவளுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு வாந்தி எடுக்கத் தொடங்கினாள்.” என்று தெரிவித்தார்

லைலாவின் அத்தை, ஜென்னா பேசிய போது “  ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் வாந்தி எடுத்தாள். பொது மருத்துவர் அவளுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளைக் கொடுத்தார். சேர்க்கை மற்றும் கவனிப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை மருத்துவர்கள் கவனிக்காததால், அவரை காப்பாற்ற முடியவில்லை.” என்று தெரிவித்தார்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.. ஏன் தெரியுமா?

உறுப்பு தானம் செய்ய லைலா குடும்பத்தினர் முடிவு

லைலா உயிரிழந்த துயரமான சம்பவத்திற்கு மத்தியில் ஒரு உன்னதமான காரியத்தைச் செய்ய அவளுடைய குடும்பம் சிறிது நேரம் ஒதுக்கியது. லைலாவின் உறுப்புகளை தானம் செய்து, கிறிஸ்துமஸுக்கு முன் மற்ற ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்ற ஒரு தன்னலமற்ற தேர்வு செய்தார்கள், இது இந்த நேரத்தில் அவர்கள் யாருக்கும் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு. உறவினர்கள் கூறினார்கள்.

அனைத்து கருத்தடை மாத்திரைகளும் ஆபத்தானதா?

கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, "அதிக அளவு ஈஸ்ட்ரோஜனைக் கொண்ட கருத்தடை  மாத்திரைகள் இரத்தக் கட்டிகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இருப்பினும், "ஈஸ்ட்ரோஜனின் குறைந்த-டோஸ் சூத்திரங்களைக் கொண்ட நவீன வகை இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததை விட மிகக் குறைவான ஆபத்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே கருத்தடை மாத்திரைகளை எடுக்க ஆரம்பித்திருந்தால் - உங்கள் மருத்துவரை அழைக்கவும். "உங்களுக்கு வலி, சூடு, சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு