Beauty
தலைமுடிக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் உச்சந்தலையில் சுழற்சியை ஏற்படுத்தி, முடி நன்றாக வளர ஊக்குவிக்கும்.
முடியை மென்மையாக்குவதில் எலுமிச்சை சாறு உதவுகிறது. இது கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும் மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
எலுமிச்சை சாற்றில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முடியை வலுப்படுத்தி, உடைவதை குறைக்கும்.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சூரிய ஒளியிலிருந்து முடியை பாதுகாக்கும் மற்றும் கூந்தலை இயற்கையாக ஒளிரச் செய்யும்.
எலுமிச்சை சாறு தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை குறைத்து, தலை முடியை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைக்கும்.
எலுமிச்சை சாறில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உச்சந்தலையில் pH அளவை சமநிலைப்படுத்தி, பொடுகை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை சாறு நீங்கள் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் கலந்து உச்சந்தலையில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து லேசான ஷாம்பு போட்டு குளிக்கவும்.