
மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல்லை சத்யாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சிப் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மல்லை சத்யா, வைகோவின் அறிக்கைக்கு பதில் தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்