பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆவது நாளான இன்று இந்திய வீராங்கனை மனு பாக்கர் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.