Watch : கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் தீப்பிடித்து எரியும் காட்சி!

Dec 30, 2022, 12:48 PM IST

உத்தரகாண்டிலிருந்து டெல்லி நோக்கி மெர்சிடஸ் பென்ஸ் காரில் சென்ற கொண்டிருந்த ரிஷப் பண்ட், முகமதுபூர் ஜல் அருகிலுள்ள ரூர்க்கியின் நரசன் எல்லைப்பகுதியில் சென்ற போது அவரது கார், கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. அவர்களது கார் தீப்பிடித்து எரியும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த், உடனடியாக ரூர்கியில் உள்ள ஷாக்‌ஷம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிரகு டேராடூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் முதுகுப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. காரில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் அவரது உயிரை காப்பற்றியது. எனினும், முழங்கால் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, குறைந்தது ஒரு வருடம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவ வட்டாரத் தவகல்கள் தெரிவிக்கின்றன.