இப்படியெல்லாம் பேசி... இந்த வாரம் எவிக்ஷனில் சிக்கிய 5 பேர்.. யார்.. யார்.. தெரியுமா?

Oct 31, 2022, 10:18 AM IST

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே... பிள்ளைகள் பாசத்தால் ஜிபி.முத்துவும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று நடன இயக்குனர் சாந்தியும் வெளியேறிய நிலையில், மூன்றாவது போட்டியாளராக அசல் கோலார் வெளியேற்ற பட்டார்.

பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடம் கொஞ்சம் அத்து மீறுவது போல் நடந்து கொண்டது தான் இவர் வெளியேற காரணமாக அமைந்தது. எனவே இவர் நாமினேஷனில் சிக்கியதும், ஓட்டுக்களை குத்தாமல் இவரை வெளியேற்றிவிட்டனர். அசல் வெளியேறிய அதிர்ச்சியில் இருந்து இன்னும் நிவா மீளாத நிலையில், இன்றிய தினம் மீண்டும் எவிக்ஷன் ப்ராசஸ் துவங்கியுள்ளது.

அதில் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் பலர், கேம்மை Manipulate செய்து விடுயாடுகிறார், தகாத வார்த்தைகள் பேசி விளையாடுகிறார் என, மொத்தம் 5 போட்டியாளர்களை நாமினேட் செய்துள்ளனர். அவர்களில், அசீம், ஆயிஷா, செரீனா, கதிரவன், மற்றும் விக்ரமன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.