விஜயகாந்த் தொடர்பான தொடர் கேள்விகளால் கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ்; செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு

Published : Jan 04, 2024, 08:08 PM IST

நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், விஜயகாந்தின் மறைவுக்கு வராதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் நடிகை கோபப்பட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் நகை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், நடிகர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கத்திற்கு வைப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நடிகர் சங்க கட்டடத்துக்கு நடிகர் விஜயகாந்த் பெயர் வைப்பது பொது கருத்தாக இருந்தால் அது தவறில்லை, அனைத்து நடிகர்களின் கருத்து தான் தனது கருத்தும்.

சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்ற தகவல் பொய்யானது. சினிமா எப்போதும் மங்கிபோகாது என்றார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லது தான், உதவி செய்வது நமக்கு தெரிந்தால் போதும், மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றார். தொடர்ந்து, விஜயகாந்தின் மறைவுக்கு வராதது தொடர்பான கேள்வியால் கடுப்பான நடிகை ஐஸ்வர்யா, நாம் கடை திறப்புக்காக வந்துள்ளோம், அதை பற்றி மட்டும் பேசலாம் என்று சற்று காட்டமாக பதில் அளித்தார்.

10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
Read more