கோபியின் திருமணம்..பாக்கியாவின் என்ட்ரி ..திக் திக் நிமிடங்கள் : இன்றைய எபிசோட்

By Kanmani PFirst Published Sep 27, 2022, 2:30 PM IST
Highlights

அதே நேரத்தில் ரிசப்ஷன் தொடங்கி விட்டதா என்று பார்க்க பாக்கியா வெளியே வருகிறார். அப்போது மயூ அங்கு இருப்பதை பார்த்து விடுகிறார் பாக்கியா. 

பாக்கியலட்சுமி தொடரில் திக் திக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கோபி - ராதிகாவின் இரண்டாவது திருமணமனத்தை தடுக்க காத்திருக்கும் கோபியின் தந்தை, அதற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் ராதிகாவின் குடும்பம், இது எதையும் தெரியாமல் சமையல் ஆர்டர் எடுத்துள்ள பாக்கியா என சுழன்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். முன்னதாக கடந்த எபிசோடுகளில் தந்தை தாய் இருவரும் பலவாறு எடுத்துக்கூறியும் எதற்கும் மசியாத கோபி ராதிகாவை  மணமுடித்தே தீருவேன் என உறுதியாக உள்ளார். 

இந்நிலையில் கல்யாண ஆர்டர் எடுத்துள்ளதால் நேற்று சமைக்க மண்டபத்திற்கு வந்துள்ளார் பாக்கியலட்சுமி, செல்வி, ஜெனி. பின்னர் ஜெனியை வீட்டிற்கு அனுப்பி விட்டு திரும்பும் செல்வி. மணமகன் பெயரை ஒரு வழியாக படித்து முடித்து விடுகிறார்.

அடக்கடவுளே..இப்படியுமா இருப்பாங்க..தான் தப்பிக்க சந்தியாவை மாட்டி விடும் ஆதி..கடுப்பான சரவணன்

இன்றைய எபிசோடில் கோபியின் தந்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக முன்கூட்டியே மண்டபத்திற்கு வந்து விடுகின்ற கோபி.  அதே நேரத்தில் பாக்கியலட்சுமி அப்பளக்கட்டை காணவில்லை எனக் கடைக்காரருக்கு போன் செய்து கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவின் குரலை கேட்ட கோபி அதிர்ச்சி அடைகிறார். எங்கிருந்து குறல்  வருகிறது என தேடுகிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் இது கேட்டரிங் ஆள் என கூறுகிறார்.

பின்னர்  கோபி, ராதிகா இருவரும் ரிசப்ஷனுக்கு தயாராகி புறப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். முன்னதாக ஈஸ்வரி சோகமாக உட்கார்ந்திருக்க அப்போது அங்கு வரும் இனியா, செழியன், எழில் மூவரும் சாப்பாடு கேட்கின்றனர். அப்பொழுது வெறும் சாப்பாடு மட்டும் வைக்க பொறியல் இல்லாமல் எங்களால் சாப்பிட முடியவில்லை எனக் கூறுகிறார்கள். இதை அடுத்து ஈஸ்வரி சமையலறைக்கு சென்று ஆம்லெட் மற்றும் அப்பளம் பொறுத்து கொடுக்கிறார். பின்னர் தாத்தா எங்கு என செழியன் கேட்க எழிலுக்கும் செழியனுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த பக்கம் இருவரும் புறப்பட அதே நேரத்தில் ரிசப்ஷன் தொடங்கி விட்டதா என்று பார்க்க  பாக்கியா வெளியே வருகிறார். அப்போது மயூ அங்கு இருப்பதை பார்த்து விடுகிறார். இன்றுடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

click me!