
Motorola Edge 50 குடும்பத்தை சேர்ந்த புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடக்கவுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா, எட்ஜ் 50 ஃப்யூஷன் மற்றும் எட்ஜ் 50 ப்ரோ ஆகியவை இந்த நிகழ்வில் உலகளாவிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 SoC உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பொது இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போன், 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த கைபேசியானது 165Hz Refresh வீதத்துடன் 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா, வரவிருக்கும் எட்ஜ் 50 தொடரில் மிகவும் பிரீமியம் கைபேசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மோட்டோரோலா எட்ஜ்+ 2024 அல்லது எட்ஜ் அல்ட்ரா 2024 மோனிகர் மூலம் அமெரிக்காவில் அறிமுகமாகலாம் மற்றும் இதன் விலை சுமார் 83,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது, அந்த நிறுவனம் செல் போன் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு முதல் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. DynaTAC 8000X என்ற போன் தான், மோட்டோரோலா நிறுவனம் முதல் முதலில் அறிமுகம் செய்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.