
புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் , ஒன்றாக சேர்த்தே எண்ணக்கூடிய புதிய பணம் எண்ணும் இயந்திரத்தை மத்திய ரிசர்வ் வங்கி சென்ற வாரம் அறிமுகம் செய்தது.
வங்கிகள் :
குறிப்பாக , வங்கிகளில் நாம் பணத்தை டெபாசிட் செய்யும் போது, ஒரே பண மதிப்பை கொண்ட ரூபாய் நோட்டுக்களை மட்டுமே தனியாக கொடுத்து, பணம் என்னும் இயந்திரத்தின் மூலம் சரிப்பார்க்க முடியும். ஆனால், தற்போது, ரூ 10 ,ரூ 20, ரூ 50, ரூ 100, ரூ 500, ரூ 2,000 என அனைத்தையும் ஒன்றாக வைத்தே , இந்த புதிய பணம் எண்ணும் இயந்திரத்தின் மூலம் கணக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்கத்தக்கது :
புதியதாக அறிமுகம் செய்துள்ள, இந்த பணம் எண்ணும் இயந்திரம் வரவேற்க தக்கதாக உள்ளது. ஆனால், அதே சமயத்தில், டிஜிட்டல் இந்தியாவை நோக்கி செல்லும் போது, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் இந்த சமயத்தில், புதியதாக அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த பணம் எண்ணும் இயந்திரம் இனி வரும் காலங்களில், எந்த அளவுக்கு பயன்படும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க முடியும் .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.