
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா அமெரிக்காவை விஞ்சிவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் ஒரே மாதத்தில் நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நைஜீரியா நாட்டிற்குச் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் அபுஜா நகரில் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்துப் பேசினார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்துவதால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கையும் எளிதாகிவிட்டது என்றார்.
"இன்று இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே பணத்தைக் கையில் வைத்து செலவு செய்கிறார்கள். பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமே நடக்கிறது. அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் நடக்கும் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் ஒரே மாதத்தில் நடக்கின்றன" என்று அமைச்சர் கூறினார்.
சென்ற பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாவும் குறிப்பிட்டார்.
நைஜீரியா – இந்தியா வணிக கவுன்சில் கூட்டத்திலும் வெளியுறவுத்துனை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். நைஜீரிய இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸிலும் உரை நிகழ்த்த உள்ளார். அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார்.
விரைவில் கூகுள் பே மூலம் உலகம் முழுவதும் UPI பேமெண்ட் வசதி! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.