
அத்தியாவசிய பொருட்களில் ஒன்று காஸ் சிலிண்டர். ஒரு முறை காஸ் தீர்ந்து விட்டால் அதனை புக் செய்வதற்கு கால் செய்ய வேண்டும் அல்லது மெசேஜ் மூலம் பதிவு செய்யா வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று.
இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப , பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது, இனி காஸ் சிலின்டர் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் ஒன்றே போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .
இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் மூலம் காஸ் சிலிண்டரை புக் செய்யும் வசதி, முதலில் உத்திர பிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்படும் எனவும், பின்னர் படிப்படியாக மற்ற மாநிலங்களில் அமல் படுத்தப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், உண்மையில் மக்களுக்கு மிகவும் எளிதாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.