மிக ஆபத்தான மொபைல் ஆப்...!! உடனடியாக மொபைலிருந்து நீக்க மத்திய அரசு அறிவிப்பு...!!

First Published Dec 17, 2016, 3:56 PM IST
Highlights


மிக ஆபத்தான மொபைல் ஆப்...!! உடனடியாக மொபைலிருந்து நீக்க மத்திய அரசு அறிவிப்பு...!!

தனிப்பட்ட  நபர்களின்  தகவல்களை  திருடும்  முயற்சியில், பாகிஸ்தானிலிருந்து  செயல்படும்  தொழில் நுட்ப குழுவினர்  ஈடுபட்டுள்ளதாக மத்திய  அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருது தெரிவித்த  உள்துறை  அமைச்சகம், நாடின் பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலாகவும்,  தனிநபர் விவரங்களை  திருடும் செயலில்  சில  ஆப்ஸ் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது, பாகிஸ்தானில் இருந்து , இந்தியர்களின்   மொபைல் எண்ணிற்கு  மால்வேர்களை அனுப்பி,  தனிப்பட்ட  தகவல்களை  திருடுவதால், எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய  உள்துறை  அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, மக்கள் பயன்படுத்தி வரும் சில அப்ஸ்களை ,உடனடியாக  மொபைலிலிருந்து  நீக்குமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Top Gun என்ற Gaming App,

 Mpjunkie என்ற Music App,

 Bdjunkie என்ற Vidoe App,

 Talking Frog என்ற Entertainment App

இதற்கு  முன்னதாக, இந்திய ராணுவத்தை உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக, Smesh App என்ற அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து  நீக்கப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

click me!