முதலமைச்சருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது ஏன்.? அப்போலோ மருத்துவமனை விளக்கம்

Published : Jul 24, 2025, 01:48 PM ISTUpdated : Jul 24, 2025, 01:59 PM IST
stalin hospital

சுருக்கம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைச்சுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிகளைத் தொடர்வார் என்றும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 தேதியன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். காலை நடைபயிற்சியின்போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இன்றுடன் 4 வது நாளை எட்டியுள்ள நிலையில் முதலமைச்சர் உடல் நிலை தொடர்பாக அப்பலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில்,

 இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை