Weather update: உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி..வெளுத்து வாங்கும் மழை ..7 மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட்..

By Thanalakshmi VFirst Published Feb 28, 2022, 2:50 PM IST
Highlights

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மார்ச் 3 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்புள்லது. இதன் காரணமாக,

வரும் மார்ச் 2 ஆம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்.

அதே போல் மார்ச் 3 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடம் கூடிய லேசான மழை பெய்யும். தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது 

04.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்  இடியுடன் கூடிய லேசான முதல் மிதமாக மழை பெய்யக்கூடும் கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேச்சை,திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும்,

தஞ்சாவூர், திருவாருர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

28.02.2022,: தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்  வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

01.03.2022: தென் தமிழக வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.

02.03.2022:  தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கும் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.

03.03.2022: தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோமீட்டம் வேகத்திலும் வீசும்..

04.03.2022: தென் மேற்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!