வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 09:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…

சுருக்கம்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…

தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் 30-ந்தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. ஆனால் போதிய அளவு மழை பெய்யாததால் பொது மக்களும், விவசாயிகளும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்

வர்தா புயல் சென்னையை கடந்து சென்றதால் ஓரளவுக்கு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. பொதுவாக  வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் 31-ந்தேதி முடிவடையும். அதன்படி பார்த்தால் இந்த சீசன் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளன.. இதனால் இந்த வருடமும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது.

இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு உள்ளது. அது வலுவற்ற நிலையில் உள்ளது. குளிர் அதிகமாக இருப்பதால் தென் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் 30-ந்தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் சென்னை மாநில ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!